ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண்களுடைய கவனத்திற்கு !! இப்படி பட்ட டாக்டர்களை எங்கே புகார் கொடுக்க வேண்டும் !!

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக் கிய கவனத் திற்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்து வ நெறிமுறைகள் தனியா க உள்ளன. தனியார் மருத் துவமனை, தனியார் கிளி னிக்கிற்கு சிகிச்சைக்கு வ ரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்க லாம்.பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிற கு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல் ) செ ய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிட ம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய் ய வேண்டும். வயிறுவலி, கல்லீ ரல், சிறுநீரகம்போன்ற பிரச்ச னைகளுடன் பெண்கள் வருவார் கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெ ண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெ ண் நோயாளியின் வயிற்றை தொட வோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டு ம்;
புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவ றான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சி லில் பாதிக்கப்பட்ட பெண் புகா ர் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண் மை என்று தெரியவந்தால், அந் த டாக்டர் மீது நடவடிக்கை எடு க்கப்படும் என்று இந்திய மருத் துவச்சங்கத்தின் தமிழக தலைவர் தெரிவித்தார்.