மே 26-05-2010.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


SSLC (State Board) Results are announced on 26th May 2010. The results can be seen thorugh the following web site http://mark-group.com/Results.html சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 26ம் தேதி வெளியிடப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.இதையடுத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுவெளியாக தயார் நிலையில் உள்ளது.இந்த நிலையில், மே 26ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 26ம் தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்வுகள் இயக்குநரகத்தில் வெளியிடப்படும். இதை இணையதளங்கள் http://mark-group.com/Results.html மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.